கிருஷ்ண ஜெயந்தி விழா : மதுராவில் கோலாகல கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2016 09:08
மதுரா : உத்தர பிரதேச மாநிலம் மதுராவில், இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவிலின் அனைத்து பகுதிகளும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மதுராவில் குவிந்துள்ளனர். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.