புவனகிரி: புவனகிரியில் ராகவேந்திரர் அவதரித்த மடாலயத்தில் 345வது ஆராதனை விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை தினமும் ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. 20ம் தேதி ராகவேந்திரர் வீதியுலா நடந்தது. 21ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவ, மாணவியர்களுக்கு 10,000 ரூபாய்க்கான காசோலையை ராகவேந்திரர் அறக்கட்டளை கவுரவத் தலைவர் சுவாமிநாதன் வழங்கினார். விழா ஏற்பாடுகளை அறக்கட்டளைத் தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேலு, ரகு செய்திருந்தனர்.