பதிவு செய்த நாள்
25
ஆக
2016
11:08
பெ.நா.பாளையம்: பேளூர், தான்தோன்றீஸ்வரர் கோவிலில், தேர் திருவிழா கொடியேற்றத்துடன், நேற்று துவங்கியது. வாழப்பாடி அருகே, பேளூர் வசிஷ்ட நதிக்கரை, தான்தோன்றீஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 11 மணியளவில், கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. அதில், ஐந்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், வேதமந்திரங்கள் முழங்க, கொடியேற்றம் நடந்தது. நாளை முதல், 29ம் தேதி வரை, தினசரி சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்படும். 27ம் தேதி, திருக்கல்யாண உற்சவம், 28ம் தேதி, கைலாய வாத்தியங்கள் முழங்க, திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கும். 29ம் தேதி, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன், விழா நிறைவடையும்.