பதிவு செய்த நாள்
25
ஆக
2016
12:08
சென்னை: சென்னை-1, தம்புசெட்டித்தெரு, புது எண்:207-ல், ஸாம்பமூர்த்தி சிவாசார்ய ஸதனத்தில் இரண்டாவது மாடியில் இயங்கும் சிவாசார்யர் அறக்கட்டளையின் சித்தாந்த ப்ரவசன கோஷ்டத்தில், சைவாகம கலாசார வித்யாகேந்திரம் ஸ்ரீசாம்பமூர்த்தி சிவாசார்யர் பவுண்டேஷனின் சுவாமி சதாசிவோம் சிவாகம ஞானகேந்திரம் ஆகியன இணைந்து எட்டாம் ஆண்டாக மாதந்தோறும் நடத்திவரும் இந்த ஆகம கருத்துக் கூட்டம் துர்முகி வருஷம் ஆவணி மாதம் 12-ஆம் நாளன்று (28.8.2016) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிமுதல் 4.30 மணி வரையில் நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலம், நாராயணவனம் அருள்மிகு அகஸ்தீச்வரர் ஆலய அர்ச்சகரும், ஆகம ஆசார்யரும், சைவாகமப்ரயோக நிபுணருமான சைவாகம பாஸ்கர, ஆகமப்ரவர, ஸத்யோஜாதசிவம், சிவஸ்ரீ டி.வி. ரவிச்சந்திர குருக்கள் அவர்களால், சைவ சமயிகள் பின்பற்ற வேண்டிய சிவநெறி விரத பூஜையான அஷ்டமி திதி காலத்து ஆலய விசேஷ பூஜையை விளக்குவதாக அஷ்டமி வ்ரதபூஜா பலவிவரணம் எனும் தலைப்பில் தமிழில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற உள்ளது. சைவாகமகலாசாரத்தில் விழிப்புணர்வு மேம்படும்பொருட்டு, ஆகம அறிஞர் ஒருவர் 96 நிமிடகாலம் ஆகமக ருத்தை விரிவாக ஒரேதலைப்பில் விளக்கிடும் வகையில் சிறப்பானதாகவும், மாதம் ஒரு முறை மட்டுமே நடைபெறுகிறது.
டி.எஸ். ஷண்முக சிவாசார்யர்,
செல்: 90031 37320
டி.எஸ். காளிதாஸ சிவாசார்யர்
செல்: 98400 99954
வி. சோமசேகர சிவாசார்யர்
முதல்வர்.எஸ்.கே.வி.கே.
செல்: 98402 99352