Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் கிருஷ்ண ... திருக்கழுக்குன்றம் திரவுபதியம்மன் கோவிலில் படுகளம் திருக்கழுக்குன்றம் திரவுபதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் கிருஷ்ணஜெயந்தி விழா: சுவாமிக்கு தங்கத்தாமரை அர்ச்சனை!
எழுத்தின் அளவு:
கோவையில் கிருஷ்ணஜெயந்தி விழா: சுவாமிக்கு தங்கத்தாமரை அர்ச்சனை!

பதிவு செய்த நாள்

26 ஆக
2016
11:08

கோவை: பீளமேடு இஸ்கான் ஜெகன்நாதர் கோவிலிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சுவாமிக்கு, தங்கத் தாமரையால், கனக கமல அர்ச்சனை’  நடந்தது. கோவை கொடிசியா அருகே உள்ள, இஸ்கான் ஜெகன்நாதர் கோவிலில், நேற்று கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. காலை 4:15 மணிக்கு, மங்கள ஹாரத்தியுடன் கிருஷ்ணஜெயந்தி நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, சிருங்கார ஹாரத்தி,  ஸ்ரீமத் பாகவத  உபன்யாசம், அகண்டநாம சங்கீர்த்தனம், சுபமத்யான ஹாரத்தி, துளசி பூஜை, சந்தியா ஹாரத்தி ஆகியவை நடந்தன. இரவு உறியடி உற்சவம் நடந் தது. கிருஷ்ணர் வேடமணிந்த, குழந்தைகளும் பெரியவர்களும், உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இரவு 10:00 மணிக்கு, மஹா அபிஷேகமும்,  அஷ்டோத்ர ஸத மஹா கலசாபிஷேகம், கனக கமல அபிஷேகமும் நடந்தது. பக்தர்களால் சுவாமிக்கு வழங்கப்பட்ட, 108 தங்கத்தாமரைகளால்,  சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

ஜெகன்நாதர் கோவிலில் வீற்றிருக்கும், பலதேவர், ஜெகன்நாதர், சுபத்ராதேவி ஆகியோருக்கு, கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி, புத்தாடைகள், புதிய  வஸ்திரங்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை  வழிபட்டனர். இஸ்கான்’ அமைப்பு சார்பில், ஸ்ரீமத் பாகவதம் சிறப்பு சொற்பொழிவும், அகண்ட நாம சங்கீர்த்தனமும் நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்த  பக்தர்களுக்கு, பிரசாதங்கள், பகவான் கிருஷ்ணரின் போட்டோக்கள் வழங்கப்பட்டன. கோவையிலுள்ள பெருமாள் கோவில்களிலும், கிரு ஷ்ணஜெயந்தி விழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. கிருஷ்ணரின் பிறப்பை நினைவுபடுத்தும் வகையில், அவரது கால் சுவடுகளை, கோவில்  நுழைவு வாயிலில், கோலங்களாக பச்சரிசி மாவில் அச்சிட்டிருந்தனர். கிருஷ்ணருக்கு பிடித்த, பால்,  தயிர், வெண்ணெய், நெய் மற்றும் இனிப்பு  வகைகளை தயாரித்து, வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar