திருக்கழுக்குன்றம் திரவுபதியம்மன் கோவிலில் படுகளம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2016 11:08
திருக்கழுக்குன்றம்: திரவுபதியம்மன் கோவிலில் படுகளம் நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடந்தது. திருக்கழுக் குன்றம் அடுத்த குண்ணவாக்கம் பகுதியில் திரவுபதியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவில், 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த து; தருமர், திரவுபதியம்மன் சேர்ந்து இருப் பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இக்கோவிலில் அக்னி வசந்த விழா, 7ம் தேதி துவங்கியது. முக்கியநிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நட ந்தன. இன்று, தருமர்பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவடைகிறது. துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நட ந்தது; அதை , ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.