பதிவு செய்த நாள்
26
ஆக
2016
12:08
ஆத்தூர்: கைலாசநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியொட்டி, பிரித்தியங்கிரா தேவிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியொட்டி, நேற்று காலை, 11 மணியளவில், உலக நன்மை வேண்டி யாக குண்டத்தில், மூலிகை கொட்டி, பிரித்தியங்கிராதேவிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம், 1.30 மணியளவில், பிரித்தியங்கிராதேவி அம்மன், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில், உன்மத்தர், ருருவர், குரோதானர், சண்டர், பீஷ்ணர், காலசம்ஹாரர், காலபைரவர் உட்பட எட்டு பைரவர் சிலைகளுக்கு, அபிஷேக பூஜை நடந்தது. காலபைரவர், வெள்ளி கவசத்தில், அருள்பாலித்தார். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.