தெய்வங்கள் பெருமையுடையவை. அதே சமயம் பக்தர்களிடம் எளிமையுடையவை. அதிலும் விநாயகர் மிகமிக எளிமையானவர். அவருக்கு ஆற்றங்கரை, குளக்கரை, அரசமர நிழல்கூட கோயில்களே! இவ்வுலகில் பதவியை விரும்பாதவர்கள் எவருமில்லை. அதேபோல் பெரியோர்கள். ஞானிகள், சித்தர்களுக்கு மோட்சமே குறிக்கோள். எல்லோரும் பதவியும், மோட்சமும் பெற எளிய வழியாக விநாயகரை பூஜிக்கும் விதம் பற்றி திரு அருட்பாவில் கூறுகிறார் இராமலிங்க அடிகளார். பகுதி, தகுதி, விகுதி என்ற மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் ப+த+வி = பதவி வரும். அந்தப் பதவியை பெற வேண்டுமானால் மூன்று சொற்களின் நடுவிலுள்ள ‘கு’ என்ற எழுத்தை ஆறால் பெருக்கிட ஆறு # கு = அறுகு என்ற சொல் வரும். இதுவே விநாயகரை அர்ச்சிக்கும் எளிய பொருளான அறுகம்புல். விநாயகரை அறுகால் அர்ச்சித்தால் பதவி கிடைக்கும். இந்த மூன்று சொற்களின் கடைசி எழுந்து தி. இதை மூன்றால் பெருக்கினால் 3# தி = முத்தி வரும். முத்தி என்பதுதானே மோட்சம். ஆகவே அறுகால் ஆனைமுகனை அர்ச்சித்தால் பதவியும் (இவ்வுலகில்) பெறலாம். முத்தியும் (அவ்வுலகில்) பெறலாம்.