சூரியனே கண்கண்ட தெய்வம், சூரிய வழிபாட்டினை முறையாக மேற்கொள்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். கண்ணொளி பிரகாசிக்கும், சரும பாதுகாப்பு ஏற்படும். இதயம் வலிமை பெறும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. சூரியனிடமிருந்து வெளிவரும் ஃபோட்டோன் என்ற ஒளி சக்தி உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் பிராண சக்தியைக் கொடுக்கிறது என்று அறிவியல் தெரிவிக்கிறது. சூரியன் காலையில் ரிக்வேத சொரூபியாகவும், மதியத்தில் யஜுர் வேத சொரூபியாகவும், மாலையில் சாமவேத சொரூபியாகவும் திகழ்கிறான் என்று மந்திர சாஸ்திரம் கூறுகிறது.