சிறப்பு அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2016 05:08
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு சுப்ரபாதம்,7:00 மணிக்கு நித்யபடி பூஜை,மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,உறியடி திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.