நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. கடலுார் அடுத்த நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும், முக்கிய வீதிகளில் உறியடி திருவிழாவும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உறியடித்தனர்.