பதிவு செய்த நாள்
29
ஆக
2016
11:08
திருப்பூர்: திருப்பூர் ஓம் சக்தி கோவிலில், ஆடிப்பூர கஞ்சி கலய விழா நேற்று துவங்கியது. பிரிட்ஜ்வே காலனி ஆதி பராசக்தி கோவிலில், ஆடிப்பூரம் திருவிழா, நேற்று துவங்கியது. இதையொட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை பணி பெண்கள் சார்பில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை, 7:00 மணிக்கு, கொடியேற்றம், குரு பூஜை மற்றும் விநாயகர் பூஜை நடைபெற்றன. மாலை, 3:00 மணிக்கு, கலச விளக்கு வேள்வி பூஜை; மாலை, 6:00 மணிக்கு, கருப்பராயன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை, 4:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறவுள்ளது. காலை, 8:15 மணிக்கு, ஈஸ்வரன் கோவிலில் இருந்து கஞ்சி கலயம் ஊர்வலம் மற்றும் கஞ்சி வரவேற்பு, கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு,பால் அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் சக்தி பீடம், ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றங்கள், ஆன்மிக இயக்கம் ஆகியன மேற்கொண்டுள்ளன.