Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தவழும் கண்ணன் அலங்காரத்தில் சீனிவாச ... புத்து மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவ தேரோட்டம் புத்து மாரியம்மன் கோவில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓம் சக்தி கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
ஓம் சக்தி கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்: பக்தர்கள் பரவசம்!

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
11:08

திருப்பூர்: ஓம் சக்தி கோவிலில், ஆடிப்பூர விழா கஞ்சி கலய ஊர்வலம் மற்றும் பொதுமக்கள் கருவறைக்குள் சென்று பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருப்பூர், பிரிட்ஜ்வே காலனி ஆதி பராசக்தி கோவிலில், ஆடிப்பூரம் திருவிழா, 27ல் துவங்கியது. அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை பணி பெண்கள் சார்பில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. 7:00 மணிக்கு கொடியேற்றமும், குரு பூஜை மற்றும் விநாயகர் பூஜையும் நடைபெற்றது. மாலை, 3:00 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. பெண்கள், ஆண்கள் பங்கேற்ற, யாக சாலை பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கருப்பராயன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. காலை, 9:00 மணிக்கு ஈஸ்வரன் கோவிலில் இருந்து கஞ்சி கலயம் ஊர்வலம் துவங்கியது. எம்.எல்.ஏ., குணசேகரன், துவக்கி வைத்தார். யூனியன் மில் ரோடு, கொங்கு மெயின் ரோடு வழியாக, கஞ்சி கலய ஊர்வலம் கோவிலை அடைந்தது. இதில், நுõற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். கோவிலில் கஞ்சி வரவேற்பு, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, கோவில் கருவறைக்குள் பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் சென்று, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நுõற்றுக்கணக்கான பக்தர்கள் பால் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு, அன்னதானம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar