பதிவு செய்த நாள்
29
ஆக
2016
11:08
திருப்பூர்: ஓம் சக்தி கோவிலில், ஆடிப்பூர விழா கஞ்சி கலய ஊர்வலம் மற்றும் பொதுமக்கள் கருவறைக்குள் சென்று பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருப்பூர், பிரிட்ஜ்வே காலனி ஆதி பராசக்தி கோவிலில், ஆடிப்பூரம் திருவிழா, 27ல் துவங்கியது. அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை பணி பெண்கள் சார்பில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. 7:00 மணிக்கு கொடியேற்றமும், குரு பூஜை மற்றும் விநாயகர் பூஜையும் நடைபெற்றது. மாலை, 3:00 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. பெண்கள், ஆண்கள் பங்கேற்ற, யாக சாலை பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கருப்பராயன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. காலை, 9:00 மணிக்கு ஈஸ்வரன் கோவிலில் இருந்து கஞ்சி கலயம் ஊர்வலம் துவங்கியது. எம்.எல்.ஏ., குணசேகரன், துவக்கி வைத்தார். யூனியன் மில் ரோடு, கொங்கு மெயின் ரோடு வழியாக, கஞ்சி கலய ஊர்வலம் கோவிலை அடைந்தது. இதில், நுõற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். கோவிலில் கஞ்சி வரவேற்பு, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, கோவில் கருவறைக்குள் பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் சென்று, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நுõற்றுக்கணக்கான பக்தர்கள் பால் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு, அன்னதானம் நடைபெற்றது.