சிதம்பரம்: சிதம்பரம், அண்ணா தெரு புத்து மாரியம்மன் கோவில் 40ம் ஆண்டு, தீமிதி உற்சவத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. உற்சவத்தையொட்டி, கடந்த 19ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இதனையொட்டி தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. காலை அம்மன் புறப்பாடும், மாலை காத்தவராயன் கதை சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடந்தது. 10ம் நாள் உற்சவமான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி காலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் முடிந்து, தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இன்று மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.