இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2016 11:08
கடலுார்: கடலுார் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் நேற்று துவங்கியது. உற்சவத்தையொட்டி, தினமும் காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு சிறப்பு பூஜை முடிந்து சுவாமி கோவில் உள் புறப்பாடு நடக்கிறது. வரும் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி, அன்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.