Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மறக்க முடியாத அனுஷம்! ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது! ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொறுமையாக இருப்பவன் சக்தியற்றவன் அல்ல..!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
02:08

*பொறுத்தார் பூமியாள்வார் என்று சொல்வார்கள். அவர்களுக்கும் ஒரு குறை உண்டு. தங்களை சக்தியற்றவன் என்று உலகம் நினைக்கிறதே என்ற குறை தான் அது. அதை நினைத்து வருத்தப்பட தேவையில்லை.
*உண்மையை ஒரு பெண்ணரசிக்கு ஒப்பிடலாம். அவளது திருவடியை மனிதன் சரணடைய வேண்டும் உண்மை மட்டுமே பிறவி என்னும் கடலைக் கடக்க உதவும்
ஓடமாகவும், இன்ப உலகம் என்னும் சொர்க்கத்தை அடைய உதவும் வாசற்படியாகவும் இருக்கிறது.
*பூக்களுக்கு தீங்கு நேராமல் வண்டு தேன் குடிப்பது போல, மக்களுக்கு ஊறு விளைவிக்காமல் வரிவசூல் செய்பவனே நல்லாட்சி புரியும் மன்னனாகத் திகழ்வான்.
*பணம் இல்லாதவனுக்கு மனதில் எழும் ஆசை முள் போன்றது. அது அவனது மனதையே குத்தி வேதனைப்படுத்தும்.
*முயற்சி இல்லாதவன் குடும்பவாழ்வு நடத்தும் தகுதியை இழக்கிறான். செயலில் ஆர்வம் காட்டும் சந்நியாசி துறவு இலக்கணத்தை மீறுகிறான்.
*பிறர் பொருளை அபகரிப்பது, பிறர் மனைவி மீது ஆசை கொள்வது, தன்னிடம் அன்பு வைத்தவரைப் புறக்கணிப்பது ஆகியவை ஒருவனை அழித்து விடும்.
*கீழான புத்தியுள்ளவர்கள், நிதானத்தை இழந்தவர்கள், சோம்பேறிகள், தற்பெருமை
கொண்டவர்களுடன் ஆலோசனை செய்யக் கூடாது.
*சகோதரிகள், வயதான சகோதரர்கள், ஏழை எளியவர்கள், நண்பர்கள் ஆகியோரைக்
காப்பாற்றும் பொறுப்பு இல்லறத்தில் வாழ்பவனுக்கு உண்டு.
*உண்மை பேசுதல், தர்மம் செய்தல், சுறுசுறுப்புடன் செயல்படுதல், பொறுமை, தைரியம், சகிப்புத்தன்மை இவை ஆறு நற்குணங்களையும் மனிதன் ஒருபோதும் கைவிடக் கூடாது.
*துன்பத்தில் மனம் தளராமலும், ஆபத்து காலத்தில் நிதானம் இழக்காமலும் விரைந்து செயலாற்றுபவனே வாழ்வில் வெற்றி பெறுவான்.
*உனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் துள்ளிக் குதிக்கத் தேவையில்லை. அதுபோல, பிறர்
துன்பப்படுவது கண்டு மகிழவும் தேவையில்லை.
*தன்னை நம்பி இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் இன்பம் காண்பவனே நல்லவன். பகைவனுக்கும் நல்லதை எண்ணும் மனம் படைத்தவனே உயர்ந்தவன்.
*துõய்மையான, எளிதில் ஜீரணமாகும் சத்தான உணவுகளை உண்பவன், எப்போதும் ஆரோக்கியம் உள்ளவனாக இருப்பான்.
*முயற்சி சிறிதாக இருந்தாலும், விளையக்கூடிய பயன் பெரிதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நற்செயல்களில் மனதைச் செலுத்துபவனே அறிஞன்.
*தர்மத்தை சத்தியமே தாங்கிப் பிடித்து உலகில் நிலைபெறச் செய்கிறது. ஒருவன் கற்ற
வித்தைகள் இடைவிடாத பயிற்சியினால் நிலைநிறுத்தப்படுகிறது.
*ஒழுக்கம் மனிதனுக்கு உயிர் போன்றது. அது இல்லாவிட்டால் பணமும், உறவுகளும்
அவனுக்கு உதவாது. வாகனம் இருந்தால் பயணம் மட்டுமே எளிதாகும். ஒழுக்கம் இருந்தால் உலகில் எல்லாமே எளிதாக அமையும். (மகான் விதுரர்)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar