திண்டுக்கல் மலையடிவார ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2016 11:08
திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவார ஆஞ்சநேயர் பெருமாள் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு ஆக.27ல் விஷ்வசேனா ஆராதனையுடன் கூடிய ஹோம வேள்விகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி பூஜை துவங்கியது. மாலையில் துவங்கிய 4ம் கால யாகபூஜைகள் காலை 9 மணிவரை நடந்தது. பின், நேற்று அதிகாலை 3 மணிக்கு வேள்வி பூஜைகள், கலச பூஜைகள் நற்றவ வேள்விகள், உற்சவ மூலவர் சக்தி பூட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. காலை 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பட்டர்கள் கோபுர கலசங்களில் புனிதநீரை ஊற்றினர். பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. காலை 7:30 மணிக்கு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் வேல்முருகன், செயல் அலுவலர் சத்தியநாராயணன், அம்மையப்பர் பரிபாலன டிரஸ்ட் செய்திருந்தது.