பதிவு செய்த நாள்
30
ஆக
2016
11:08
சென்னை: பெசன்ட் நகர் வேளாங் கண்ணி ஆலயத்தின், 44ம் ஆண்டு பெருவிழா, நேற்று மாலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். அன்னை மரியாளின் பிறந்த நாள், ஒவ்வொரு ஆண்டும், செப்., 8ம் தேதி, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை, பெசன்ட் நகர் கடற்கரை அருகில் உள்ள, ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில், நவநாள் பெரு விழா கொண்டாடப்படுகிறது.
12 அடி நீள கொடி: இதை முன்னிட்டு, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தின், 44ம் ஆண்டுப் பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவ ங்கியது. மாலை, 4:45 மணிக்கு, அன்னை வேளாங்கண்ணியின் தேர் ஊர்வலம் நடந்தது. ஆலய வளாகத்தில் உள்ள, பிரம்மாண்டமான கொடி மரத்தில், தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், 12 அடி நீளமுள்ள மரி அன்னையின் உருவம் தாங்கிய கொடியை ஏற்றினார். இவ்விழாவில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல் துறை, போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை, மாநகராட்சி, சுகாதாரத் துறையினர் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். மாநகர போக்குவரத்து சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ÷ பருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
முடிசூட்டு விழாவுடன்..: திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று, தேவ அழைத்தல் விழா நடக்கிறது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உழைப்பாளர் விழா, துறவற சபைகள் விழா, இளைஞர்கள் விழா, பக்த சபைகள் விழா, நற்கருணை விழா, ஆசிரியர் தின விழா, நலம் பெறும் விழா என, வரும் செப்., 6ம் தேதி வரை நடக்கின்றன. பெருவிழாவின் முக்கிய நாளான செப்., 7ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. 8ம் தேதி அன்னையின் முடிசூட்டு திருவிழாவுடன் பெருவிழா நிறைவு பெறுகிறது.