பதிவு செய்த நாள்
30
ஆக
2016
11:08
ராமநாதபுரம்: சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் 230 விநாயகர் சிலைகள் செப்., 6,7,8 தேதிகளில் ஊர்வலம் நடக்கிறது. செப்., 5 சதுர்த்தி விழாவிற்காக ராமநாதபுரம் வட்டாரத்தில் 51, பரமக்குடியில் 53, கமுதியில் 16, ராமேஸ்வரத்தில் 71, கீழக்கரையில் 17, திருவாடானையில் 10, முதுகுளத்துாரில் 12 விநாயகர் சிலைகள் இன்னும் சில தினங்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இவற்றிற்கு தினமும் இரு வேளை பூஜை மற்றும் பஜனை நடக்கிறது. சதுர்த்தி நாளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. செப்., 6ல் பரமக்குடி, ராமேஸ்வரம் வட்டாரங்களில் 152 சிலைகளும், செப்., 7ல் ராமநாதபுரம் உள்பட இதர வட்டாரங்களில் 76 சிலைகளும், செப்., 8ல் இரண்டு சிலைகளும் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. செப்., 6ல் நான்கு இடங்களிலும், செப்., 7ல் மூன்று இடங்களிலும் ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மகாசபா, பா.ஜ., உள்ளிட்ட இந்து அமைப்புகள் செய் துள்ளன. எஸ்.பி., மணிவண்ணன், கூடுதல் எஸ்.பி.,க்கள் இன்பமணி, வெள்ளைத்துரை, உதவி எஸ்.பி., சர்வேஸ்ராஜ் தலைமையில் 7 சப் டிவிஷன்களிலும் 24 இன்ஸ்பெக்டர் உள்பட ஆயுதப்படை, ஊர்க்காவல் படை மற்றும் உள்ளூர் போலீசார் என, 664 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.