திருவாடானை: ஓரியூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தினமும் தேர்பவனி, நற்கருணை, சிறப்பு திருப்பலி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர கூட்டு திருப்பலி செப்.,7ம் தேதியும் அன்று இரவு 9 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது. செப்.,8 இரவு 7 மணிக்கு கொடியிறக்கப்பட்டு நற்கருணை ஆசி நடக்கிறது.