பதிவு செய்த நாள்
30
ஆக
2016
11:08
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி தொண்டர்கள் மாலை அணிந்து, விரதம் துவக்கினர். திருப்பூர் மாவட்டத்தில், 5,100 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் படுகிறது. திருப்பூர் மாநகர பகுதியில், 820 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 8ம் தேதி, விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.பகுதி வாரியாக சிலை பிரதிஷ்டை செய்து, விழா ஏற்பாடு செய்யும் பொறுப்பாளர்கள் மற்றும் இந்து முன்னணி தொண்டர்கள், காப்பு கட்டி, விரதம் துவக்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது.கோட்டை மாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு வெங்கடேஸ்வரன், மாநில நிர்வாக குழு உறுப் பினர் செந்தில் குமார் மற்றும் பொறுப்பாளர்கள், தொண்டர்கள், விநாயகர் மாலை அணிந்து விரதம் துவக்கினர்.