சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல்கள் எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவை உதவி ஆணையர் ஆனந்த், கோவில் துணை ஆணையர் மாரிமுத்து, சத்தி சரக ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கோவில் பணியாளர்கள், சத்தியமங்கலம் காமதேனு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபட்டனர். உண்டியல்களில் மொத்தம், 59 இலட்சத்து, 13 ஆயிரம் ரூபாய், 294 கிராம் தங்கம், 561 கிராம் வெள்ளி இருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.