திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகளின் திருநட்சத்திர மகோத்சவத்தை முன்னிட்டு ராமானுஜர் வீதியுலா நடந்தது. திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகளின் 58வது திருநட்சத்திர மகோத்சவ விழா நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் மூலஸ்தானம் மற்றும் உள்பிரகார சன்னதிகளில் மங்களாசாசனம் செய்தார். எம்பெருமானார் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு அவரது திருவுருவ ஊர்வலத்தை ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் துவக்கி வைத்தார். காலை 10:00 மணிக்கு ஜீயர் மடத்தில் சித்திரக்கூடம் ரங்காசார்ய சுவாமிகள் நித்யக்கிரந்தம் தலைப்பிலும், மணிவண்ணன் சுவாமிகள் சேதாந்தசாரம், சென்னை கோபாலகிருஷ்ணன் நம்மாழ்வாரும் ஆண்டாளுக்கும், அண்ணணான சுவாமி எம்பெருமானார் என்ற தலைப்புகளில் சொற்பொழிவு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.