Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)

பதிவு செய்த நாள்

03 செப்
2016
12:09

அனைவரிடமும் இரக்கம் காட்டும் அன்பர்களே! (பிள்ளைகளால் நன்மை)

நற்பலன் அதிகரிக்கும் மாதமாக அமையும். கடந்த மாதம் சாதகமற்று இருந்த சூரியன், தற்போது நல்ல இடத்திற்கு வருகிறார். புதன் செப்.29ல் இருந்தும், சுக்கிரன் அக்.4ல் இருந்தும் நன்மை தருவார்கள். கேதுவால் மாதம் முழுவதும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். வெளியூர் பயணம் மூலம் மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். பிரிந்திருந்த குடும்பம் செப்.29க்கு பிறகு ஒன்று சேர்வர். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை மறையும். பிள்ளைகளின் வழியில் நற்பலன் உண்டாகும். செப்.19,20ல் பெண்களால் பொன், பொருள் கிடைக்கும். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டை விலகும். சமூகத்தில் மதிப்பு உயரும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத் தேவை பூர்த்தியாகும். ஆனால் செப். 29 வரை வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்துடன் திருத்தல யாத்திரை செல்லும் வாய்ப்பு உண்டாகும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் படிப்படியாக லாபம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணத்தால் ஆதாயம் பெறுவீர்கள். புதிய வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி காணலாம். அக்.1,2ல் எதிர்பாராமல் பணவரவு கிடைக்கலாம். போட்டியாளர்களை எதிர்த்து வெல்லும் ஆற்றல் உண்டாகும். முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் செப்.19க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் அக். 3 க்கு பிறகு நிலைமை சீராகும். பெண்களைப் பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். செப். 17,18,21,22 அக். 14,15,16ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும் என்றாலும் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். முயற்சி எடுத்தால் கோரிக்கை நிறைவேற இடமுண்டு. பணியிடத்தில் மதிப்பு உயரும். சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் செப்.29க்கு பிறகு ஒன்று சேருவர். அக்.10,11ல் சிறப்பான பலனைக் காணலாம். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு.

கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். அக்.3க்குப் பிறகு சுக்கிரன் சாதகமாக காணப்படுவதால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். போதிய வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் ஓரளவு பலனை எதிர்நோக்கலாம். புகழ் கவுரவத்திற்கு பங்கம் வராது.

மாணவர்கள் தற்போது சுமாரான பலனை அனுபவித்து வந்தாலும், செப்.29க்குப் பிறகு புதன் சாதகமாக இடத்திற்கு வருகிறது. அதன்பின் நல்ல பலனை காணலாம்.

விவசாயிகளுக்கு மகசூல் சீராக இருக்கும். கடின உழைப்பில் ஈடுபட வேண்டியதிருந்தாலும், அதற்கான வருவாய் கிடைக்காமல் போகாது.

பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் செப்.29க்கு பிறகு எளிதில் கைகூடும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். தோழிகளிடம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். செப்.23,24,25ல் புத்தாடை, அணிகலன் கிடைக்கப் பெறுவீர்கள்.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு செப்.19,20,23, 24,25 அக்.1,2,3, 4,10,11,12,13 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான விருச்சிகத்தில் சந்திரன் அக்டோபர் 5,6,7ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்பு தேவை.

அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடுங்கள். சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு காக்கைக்கு அன்னமிடுங்கள். முருகன் கோவில் விளக்கேற்றி வணங்குங்கள். நாக தேவதையை ராகு காலத்தில் வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்க தவறாதீர்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar