Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2)
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2)

பதிவு செய்த நாள்

03 செப்
2016
12:09

ஆடம்பர வாழ்வில் ஆர்வம் காட்டும் அன்பர்களே! (எதிர்பாராத ஆதாயம்)

இம்மாதம் புதன் செப். 29 வரையும், சுக்கிரன் செப்.19 வரையும் நன்மை தர உள்ளனர். குரு மட்டும் மாதம் முழுவதும் நற்பலனை வாரி வழங்குவார். அவரால் பொருளாதார வளம் மேம்படும். பண வரவு எதிர்பார்த்தபடி சிறப்பாக இருக்கும். இருப்பினும் ஆடம்பரச் செலவை குறைத்து சிக்கனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று மகிழ்வீர்கள். மாதத் தொடக்கத்தில் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். செப்.29க்கு பிறகு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். செப்.17,18, அக்.14,15,16ல் உறவினர்கள் வருகையால் நன்மை கிடைக்கும். அதே நேரம் செப். 28,29ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். செப்.21,22ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். உடல்நலம் சுமாராக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் இருந்த பிற்போக்கான நிலை மறையும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். மாத முற்பகுதியில் பங்குதாரர் வகையில் இணக்கம் அதிகரிக்கும். கையில் பணப்புழக்கம் சீராக இருக்கும். செப். 29க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். அக்.3,4ல் எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. எதிரிகளின் இடையூறை
முறியடிக்கும் வலிமை பெறுவீர்கள். செப். 19,20,23,24,25ல் முயற்சியில் தடை குறுக்கிடலாம்.

பணியாளர்கள் முன்னேற்றம் காணலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.  பணி விஷயமாக அடிக்கடி வெளியூருக்கு செல்ல நேரிடலாம். அக்.12,13ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். செப்.29க்கு பிறகு அதிகமாக  உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கை நிறைவேறுவது எளிதல்ல. சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு எளிதாக புதிய ஒப்பந்தம் கிடைக்கும். செப்.19க்கு பிறகு சுமாரான நிலை உண்டாகும். விடாமுயற்சி எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். அக்.3க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மக்கள் நலப்பணிகளில் ஆர்வம் உண்டாகும்.

மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரை ஏற்று படிப்பர். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். பெற்றோர் பெருமை படும் விதத்தில் மாணவர்களின் வளர்ச்சி அமையும். செப்.29க்கு பிறகு படிப்பில் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். கோதுமை, பழவகைகள், காய்கறிகள் போன்றவற்றின் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் தாமதமாகலாம். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. வழக்கு விவகாரம் பாதகமாகவே அமைய வாய்ப்பு உண்டு. எனவே புதிய வழக்கு எதிலும் ஈடுபட வேண்டாம்.

பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் விரைவில் கைகூடும். மாத தொடக்கத்தில் தோழிகள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவர். செப்.29ம் தேதிக்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும். சிரத்தை எடுத்தால் தான் கோரிக்கை நிறைவேறும். செப்.26,27ல் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். அக்.5,6,7ல் விருந்து விழா என சென்று வர வாய்ப்புண்டு. சகோதரிகளால் நன்மை ஏற்படும்.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு செப்.17,18,21, 22,26,27, அக்.3,4,5,6,7,12, 13,14,15,16
ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான தனுசு ராசியில் சந்திரன் அக்.8,9ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் விழிப்பு தேவை.

அதிர்ஷ்ட எண்: 1,2  நிறம்: மஞ்சள், பச்சை

பரிகாரம்: தினமும் சூரிய வழிபாடு செய்யுங்கள். துர்க்கைக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பசுவுக்கு கீரை, பழம் கொடுப்பது நன்மை தரும். சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar