சாமர்த்தியத்தால் வெற்றி காணும் அன்பர்களே! (வருமானத்தில் ஏறுமுகம்)
இம்மாதம் புதன் செப்.29க்கு பிறகும், சுக்கிரன் அக்.4 வரையும் நற்பலனை தருவார்கள். அதோடு சனி, ராகுவால் நற்பலன் தொடரும். முக்கிய கிரகங்கள் சாதகமாக காணப்படுவதால் எதையும் வெற்றிகரமாக முடிக்கலாம். கையில் பெரும்பணம் புழங்கும். வருமானம் ஏறுமுகமாகவும், கடன் இறங்கு முகமாகவும் அமைந்திருக்கும். உங்களுக்கு இருந்த அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பம் மாதத் தொடக்கத்தில் குதுõகலம் நிறைந்திருக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு உயரும். செப்.19க்கு பிறகு மனதில் பக்தி உயர்வு மேம்படும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். செப்.23,24,25ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். செப்.19,20ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு உருவாகி மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். உடல் நலம் சுமாராக இருக்கும்.செவ்வாயால் அலைச்சல் ஏற்படலாம். கேதுவால் அவ்வப்போது பொருள் விரயம் ஏற்படலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சியும் சிறப்படையும். அனுபவசாலிகளின் அறிவுரையை பின்பற்றி முன்னேற்றம் காண்பீர்கள். பெண்கள் வகையில் சற்று கவனமாக இருப்பது நல்லது. போட்டியாளர் தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு முதலியன செப்.29க்கு பிறகு மறையும். செப்.21,22,26,27ல் சந்திரனால் முயற்சியில் தடை வரலாம். அக்.5,6,7ல் நல்ல வருமானம் கிடைக்கும்.
பணியாளர்கள் மாத முற்பகுதியில் வேலையில் கவனமுடன் இருக்கவும். செப்.29க்கு பிறகு புதன் சாதகமான நிலையில் இருப்பதால் நன்மை உண்டாகும் வேலைப்பளு குறையும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். செப்.17,18, அக்.14,5,16ல் சிறப்பான பலன் காணலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். செப்.19க்கு பிறகு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். அக்.3க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். புகழ், கவுரவத்திற்கு பங்கம் வராது.
அரசியல்வாதிகள், பொதுநல தொண்டு செய்பவர்கள் சிறப்பான பலனைக் காண்பர். அக்.3,4ல் குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் மாத முற்பகுதியில் நண்பர்களின் விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. செப்.29க்கு பிறகு கல்வியில் சிறந்த நிலை பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதலை ஏற்று முன்னேற்ற பாதையில் செல்வர். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கப் பெறுவர். பசு மற்றும் கால்நடைகள் வகையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகலாம். வழக்கு விவகாரம் சுமாராகவே இருக்கும்.
பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் பெறுவர். கணவனின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களால் குடும்பம் பெருமை பெறும். சிலருக்கு அக்கம் பக்கத்தினர் வகையில் வீண் பகை உருவாகலாம் கவனம். செப்.19க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். செப்.29க்கு பிறகு சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். செப்.28,29ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். செப்.8,9ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு செப்.17,18,19, 20,23,24,25, 28,29, அக். 5,6,7,8,9,14,15,16 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான மகர ராசியில் சந்திரன் அக்.10,11ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்பு தேவை.
அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: வெள்ளை, நீலம்
பரிகாரம்: செவ்வாயன்று முருகனை வழிபட தவறாதீர்கள். முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் குடும்ப பிரச்னை மறையும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். புதன்கிழமை குலதெய்வத்தை வணங்குங்கள். அம்மனுக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபடுங்கள்.
மேலும்
பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »