பதிவு செய்த நாள்
03
செப்
2016
12:09
விடாமுயற்சிக்கு உதாரணமாகத் திகழும் அன்பர்களே! (தொழிலில் லாபம்)
சூரியன், புதன்,குரு ஆகியோரால் நன்மை உண்டாகும். சுக்கிரன் செப்.19 வரையும்,
அக்.4க்கு பிறகும் நற்பலனை வாரி வழங்குவர். முயற்சியில் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூக மதிப்பு உயரும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செப்.29க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வாழ்வில் வசந்தம் தென்படுவதால் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். சுபவிஷயத்தில் இருந்த தடை அனைத்தும் விலகும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். குடும்பத்தில் நன்மை மேலோங்கும். வீட்டிற்கு தேவையான வசதி வாய்ப்பு பெருகும். பெண்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் பொன், பொருள் சேரும். பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்னை மறையும். செப்.30, அக்.1,2ல் உறவினர் வருகையால் நன்மை அதிகரிக்கும். ஆனால் அக்.12,13ல் அவர்கள் வகையில் பிரச்னை குறுக்கிட வாய்ப்பு உண்டு. எனவே சற்று ஒதுங்கி இருக்கவும். அக்.5,6,7ம் தேதிகளில் வாழ்வில் இனிய அனுபவம் காண்பீர்கள்.
தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் நற்பலன் கிடைக்கும். விரிவாக்கப் பணிக்காக வங்கி கடன் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலாளர் ஒத்துழைப்பால் நல்ல வளர்ச்சி உண்டாகும். புதிய வியாபார முயற்சி அனுகூலம் அளிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் மூலம் அமோக லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டவசமாக செப்.19,20ல் திடீர் வருமானம் கிடைக்கும். அக்.3,4,8,9ல் தொழிலில் தடையைச் சந்திக்கலாம்.
பணியாளர்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். பதவி உயர்வு,
சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடையேதும் இருக்காது. சக பெண்
ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும். அரசு பணியாளர்கள் பணியில் நல்ல முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகளும் எளிதில் நிறைவேறும். செப்.28,29ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
கலைஞர்கள் புகழோடு நல்ல வருமானத்தையும் பெறுவர். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். செப்.19 முதல் அக்.4 வரை சுக்கிரனால் தடைகளை சந்திக்க நேரிடலாம். அரசாங்க வகையில் பட்டம், பரிசு கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த நன்மை கிடைக்கப் பெறுவர்.
தொண்டர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவர். அதிகாரிகளின் ஆதரவுடன் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவர். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு இனி இருக்காது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் குணம் பெற்று வீடு திரும்புவர்.
மாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர். குரு, புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு
போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் அறிவுரையை பின்பற்றி கல்வி வளர்ச்சி பெறுவீர்கள்.
விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். மஞ்சள், கேழ்வரகு, சோளம்
காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தைக் காணலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். செப்.28க்கு பிறகு சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.
பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரிடம் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். அக்.10, 11ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். செப்.21,22ம் தேதிகள் சிறப்பானதாக அமையும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமை கொள்வீர்கள்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு செப்.19,20,21,22, 28,29,30, அக்.1,2,5,6,7,10,11 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச்செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான மிதுனத்தில் சந்திரன்
செப்.24,25,26ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து
இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புணர்வு தேவை.
அதிர்ஷ்ட எண்: 1,5,9 நிறம்: செந்துõரம், பச்சை
பரிகாரம்: நாக தேவதையை வணங்கி வாருங்கள். துர்க்கை வழிபாடு வளர்ச்சிக்கு துணை நிற்கும். செவ்வாயன்று முருகனை வழிபடுங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யுங்கள். வெள்ளிக்கிழமை லட்சுமி சன்னதியில் தீபமேற்றி வணங்குங்கள். சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.