பதிவு செய்த நாள்
03
செப்
2016
12:09
தன்னம்பிக்கை மனம் படைத்த அன்பர்களே! (வியாபாரத்தில் வளர்ச்சி)
சூரியன் சாதகமான கன்னி ராசிக்கு வருவதால் இந்த மாதம் மனதில் குதுõகலம் அதிகரிக்கும். புதன் செப். 29 க்கு பிறகும், சுக்கிரன் செப்.19 முதல் அக்.4 வரை நன்மை தருவார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார வளம் மேம்படும். கேது, சூரியன் ஆகிய கிரகங்கள் பக்க பலமாக இருப்பதால் எண்ணிய எண்ணம் இனிதே நிறைவேறும். உறவினர்களுடன் திருத்தல யாத்திரை செல்ல வாய்ப்புண்டு. வீட்டுத் தேவை குறைவின்றி பூர்த்தியாகும். குடும்ப முன்னேற்றத்திற்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர். குறிப்பாக அவர்கள் மூலம் அக்.8,9ல் நன்மை உண்டாகும். செப்.19க்கு பிறகு நண்பர்களால் உதவி கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். புது மணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் பெறுவர். அக்.3,4ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். செப்.17,18, அக்.14, 15,16ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, மனக்கவலை முதலியன செப்.29க்கு பிறகு மறையும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தடை அனைத்தும் நீங்கி தொழிலில் நல்ல வளர்ச்சி காணலாம். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். குறிப்பாக செப்.21,22ல் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். அக்.5,6,7,10,11 ல் சந்திரனால் சிறு தடைகள் உருவாகலாம். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து செப்.29க்கு பிறகு விடுபடுவர். அதன் பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட வியாபாரம் சிறப்படையும். பங்கு வர்த்தகத்திலும் ஆதாயம் கிடைக்கும்.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பான முறையில் இருக்கும். விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும். உங்கள் திறமைக்குரிய மரியாதை கிடைக்கும். செப்.29க்கு பிறகு சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செப்.30, அக்.1,2 ஆகிய தேதிகளில் எதிர்பாராத நன்மை கிடைக்கும். செப்.19,20ல் சிலர் மனக் குழப்பத்திற்கு ஆளாகலாம் கவனம்.
கலைஞர்களுக்கு எதிரி தொல்லை, அவப்பெயர், போட்டி முதலியன செப்.19க்கு பிறகு மறையும். அதன் பிறகு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசாங்க வகையில் சிலருக்கு விருது கிடைக்க வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் சீரான முன்னேற்றம் காணலாம். அரசியல்ரீதியாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். தொண்டர்களின் நலனில் அக்கறை செலுத்த தொடங்குவீர்கள்.
மாணவர்களுக்கு செப்.29 வரை படிப்பில் அக்கறை தேவை. நண்பர்களின் விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. அதன் பின் கல்வியில் வளர்ச்சியை எதிர்நோக்கலாம். புதன் சாதகமாக இருப்பதால் போட்டி, பந்தயத்தில் பங்கேற்று வெற்றி காணலாம்.
விவசாயிகள் எதிர்பார்த்த விதத்தில் நல்ல மகசூல் காண்பர். கால்நடை வளர்ப்பிலும் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகார முடிவுகள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். புதிதாக நிலம் வாங்கும் எண்ணம் இருந்தால் அதை ஒத்தி வைப்பது நல்லது.
பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். அக்.12, 13ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். செப்.19க்கு பிறகு அண்டைவீட்டார் அனுகூலமாக இருப்பர். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். ஆடம்பர வீட்டு உபயோகப்பொருள் வாங்க யோகம் உண்டு. செப்.23,24,25ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு செப். 21,22,23,24,25,30, அக்.1,2,3,4, 8,9,12,13 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான கடக ராசியில் சந்திரன் செப். 26,27ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட எண்: 1,5 நிறம்: சிவப்பு, வெள்ளை
பரிகாரம்:வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். முருகன் கோவிலுக்கும் சென்று வாருங்கள். தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். வெள்ளியன்று நாக தேவதையை வணங்கி வாருங்கள். புதன்கிழமை பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.