இந்த மாதம் புதன் செப்.29க்கு பிறகும், சுக்கிரன் அக்.4 வரையும் நற்பலனைக் கொடுப்பார்கள். செவ்வாய் மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சுமாராக இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சற்று முயற்சி எடுத்தே முடிக்க வேண்டியதிருக்கும். பணப்புழக்கத்துக்கு குறைவிருக்காது. புதிய வீடு, வாகனம் வாங்க நல்ல வாய்ப்பு உருவாகும். திறமையை வெளிப்படுத்தி கவுரவம், புகழ் பெறுவீர்கள். குடும்பத்தில் சுக்கிரனால் வசதி வாய்ப்பு பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பொருளாதார வளம் கூடும். செப்.29க்கு பிறகு உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். மனைவி வகையில் இருந்த குடும்ப பிரச்னை அடியோடு மறையும். அக்.12,13ல் பெண்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அக்.8,9ல் உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மையும் கிடைக்கும். செப்.21, 22ல் அவர்களின் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் சிரத்தை எடுத்தே உழைக்க வேண்டியதிருக்கும். அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். செப்.17,18, அக்.10,11,14,15,16ல் சந்திரனால் இடையூறுகள் வரலாம். செப்.26, 27ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். தனியார் துறையில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும். செப்.29க்கு பிறகு புதனால் சிறப்பான நிலையில் இருப்பர். வேலைப்பளு படிப்படியாக குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பணிமாற்றம் கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். அக்.5,6,7ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கப் பெறுவர். மாத தொடக்கத்தில் புகழ், பாராட்டு வந்து சேரும். அக்.4க்கு பிறகு எதிரிகளால் மறைமுகப் போட்டிகள்அதிகம் இருக்கும். அவப்பெயர் உருவாகலாம்.
அரசியல்வாதிகள், எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். செப்.29க்கு பிறகு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள்.
விவசாயிகள் சீரான வளர்ச்சி காண்பர். காய்கறிகள், கீரை வகைகள், மற்றும் பழ வகைகள் ஆகியவற்றில் நல்ல மகசூலைக் காணலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் பெருகும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளவும். வழக்கு விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும்.
பெண்கள் செப்.29 வரை குடும்ப விஷயங்களில் விட்டுக் கொடுத்து போகவும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பொறுமை தேவை. அதன் பிறகு நன்மை மேலோங்கும். கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும். உங்களின் பங்களிப்பால் குடும்பம் சிறப்படையும். பெண் காவலர்கள் சிலருக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. செப்.19,20 ல் நகை, ஆபரணம் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருள் வரப்பெறலாம். செப். 28,29 ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். தோழிகளால் நன்மை உண்டாகும். ராகுவால் சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். கடந்த காலத்தில் இருந்த அலைச்சல், உடல் உபாதை இந்த மாதம் இருக்காது. செப்.23, 24,25ல் சிலருக்கு மனத்தளர்ச்சி ஏற்படலாம்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு செப்.19,20,26,27,28,29, அக்.5,6,7,8,9,12,13, ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான கன்னி ராசியில் சந்திரன் செப்.30, அக்.1,2ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புணர்வு தேவை.
அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். தினமும் காலையில் சூரியனை தரிசியுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாயன்று முருகனை வழிபடுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »