Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

பதிவு செய்த நாள்

03 செப்
2016
12:09

பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவும் அன்பர்களே! (உயரும் பணப்புழக்கம்)

சுக்கிரன் செப்.19க்கு பிறகு சாதகமான இடத்துக்கு மாறுகிறார். புதன் செப்.29 வரை நற்பலன் கொடுப்பார். அதோடு ராகு, குரு ஆகியோரால் நன்மை உண்டாகும். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். சீராகவும், சிறப்பாகவும் இம்மாதம் செல்லும். குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப விஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வசதி, வாய்ப்பு பெருகும். ராகுவால் உங்கள் ஆற்றல் மேம்படும். குடும்பத்தேவை அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். செப். 19க்கு பிறகு வசதி, வாய்ப்பு பெருகும். வாழ்வில் இனிய அனுபவம் உண்டாகும். பெண்களால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக செப்.17,18, அக்.14,15,16ல் அவர்கள் உதவிகரமாக இருப்பர்.

அக்.10,11ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் அவர்கள் வகையில் செப்.23,24,25ல் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. செப்.29க்கு பிறகு கணவன்-, மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து போகவும். செவ்வாயால் அக்கம் பக்கத்தினர்களின் தொல்லை ஏற்படலாம். சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. உடல்நலம் சுமாராகவே இருக்கும். செவ்வாயால் உஷ்ணம், தோல் தொடர்பான பிரச்னை உருவாகலாம். சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். அக்.5,6,7ல் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். செப்.19க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்குவர்த்தகத்திலும் ஆதாயம் கிடைக்கும். செப்.28,29ல் திடீர் பணவரவு உண்டாகும். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். தொழிற்சாலை கூட்டமைப்பு தொடர்பான சங்கங்களின் பதவி கிடைக்க வாய்ப்புண்டு.

பணியாளர்கள் புதனின் அனுகூலத்தால் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவால் நன்மை உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். விண்ணப்பித்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும். அக். 8,9ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பெண்கள் வகையில் இருந்த சிரமம் செப்.19க்கு பிறகு மறையும். அதன்பின் அவர்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிபுரிவர். புதிய ஒப்பந்தம் முயற்சியால் கிடைக்கும்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்படைவர். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர். போட்டிகளில் வெற்றி கிடைக்கப் பெறுவர். ஆசிரியர்களின் ஆலோசனையும் அறிவுரையும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
செப். 29 முதல் படிப்பில் சற்று தொய்வு ஏற்படலாம் கவனம்.

விவசாயம் சிறப்படையும். வருமானத்திற்கு குறை இருக்காது. கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், நெல், கோதுமை போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் முடிவு திருப்திகரமாக இருக்கும்.

பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கப் பெறுவர். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சியைப் பெறுவர். புதிய பதவி தேடி வரும். செப்.29க்கு பிறகு பணியிடத்தில் பொறுமையுடன் இருப்பது நல்லது. செப்.30, அக்.1,2 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். செப்.21,22ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.  வீட்டு செலவுக்கு போதுமான பணம் இருக்கும்.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு செப்.17,18,21,22,28,29,30, அக்.1,2,8,9,10,11,14,15,16
ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிக்குஉரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான துலாம் ராசியில் சந்திரன் அக்.3,4ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட எண்: 8,9 நிறம்: மஞ்சள், வெள்ளை

பரிகாரம்: விநாயகரை சதுர்த்தி திதியன்று வழிபட்டு வாருங்கள். சாஸ்தா வழிபாடு சங்கடம் போக்கும். சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றுங்கள். முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்க மறவாதீர்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar