மத்வாச்சாரியார் என்னும் மகானின் வழியில் வந்தவர் வியாசதீர்த்த பாத உடையார். இவர் திருப்பதியில் 12 ஆண்டுகள் தங்கி வெங்கடேசப் பெருமாளை வழிபட்டு வந்தார். ஒரு பவுர்ணமிநாளில் குஹூ யோகம்’ என்னும் கிரகச்சேர்க்கை உண்டாவதால், நாடாளும் மன்னனின் உயிருக்கு ஆபத்து உண்டாகும் என்று அறிந்து தகவல் சொன்னார். மன்னன் மிகவும் வருந்தினான். ராஜாவாக பதவியில் இருந்தால் தானே ஆபத்து நேரும் என்பதால், அந்த பவுர்ணமியன்று மன்னனை நீக்கி விட்டு, தானே ஆட்சி செய்ய முடிவெடுத்தார். தன் தவசக்தியால் மன்னனுக்கு தீங்கு வராமலும் தடுத்தார். மன்னராக ஒருநாள் இருந்ததால், வியாசராஜா என்ற சிறப்பு பெயரும் பெற்றார்.