திருப்பதிக்கு தினமும் அதிகாலையில் யமுனாத்துறை என்ற இடத்தில் இருந்து பெருமாளின் தோளில் அணிவிக்கும் தோமாலா. பூலாங்கி என்னும் பூவால் செய்த ஆடை எடுத்து வரப்படும். இதனை ஜீயங்கார், ஏகாங்கி என்பவர்கள் கூடையில் சுமந்து வருவர். இவர்கள் முன் முரசு அறைந்தபடி ஒருவர் செல்வார். ஜீயங்காரைத் தொடர்ந்து பள்ளியெழுச்சி பாட, திருப்பாவை பாட, புருஷ சூக்த மந்திரம் ஜபிக்க என ஆறு அர்ச்சகர்கள் பின் தொடர்வர்.கருவறையில் உள்ள அர்ச்சகர் முதலில் பெருமாளின் திருமார்பில் உள்ள மகாலட்சுமி தாயாரை பூச்சரத்தால் அலங்கரிப்பார். பின் தோமாலையும், பூலாங்கியும் பெருமாளுக்கு சாத்தப்படும்.