திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2016 05:09
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வணங்கினால் கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால் தயிர் உட்பட 18 பொருட்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உற்சவர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார்.கணக்கர் சரவணன் கவுன்சிலர் கலியபெருமாள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.