விழுப்புரம்: வளவனுார் குமாரபுரி, மகா சித்தர் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது.
இதையொட்டி, கடந்த 16ம் தேதி வலம்புரி விநாயகர் மகா வேள்வி, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலை மரக்கன்றுகள் நடும் விழா, மகா சித்தர் வேள்வி பூஜை, பகல் 12:00 மணிக்கு வளவனுார் தாண்டவமூர்த்தி சுவாமிகள், சுப்ரமணிய சுவாமிகள் முன்னிலையில் மகேஸ்வரர் பூஜை, அன்னதானம், மாலை 5:00 மணிக்கு அம்மையப்பர் திருக்கல்யாணம், இரவு 8:00 மணிக்கு அம்மையப்பர், சாய் பாபா வீதியுலா நடந்தது. தொடர்ந்து 18ம் தேதி காலை 8:00 முதல் பிற்பகல் 1:00 மணிவரை இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7:00 மணிக்கு சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தன.