பதிவு செய்த நாள்
27
செப்
2016
11:09
திருப்பதி: திருமலையில், ஏழுமலையான் தரிசனம், ஐந்து மணி நேரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.திருமலை ஏழுமலையானுக்கு, அக்., 3ல், பிரம்மோற்சவம் துவங்குகிறது.
இதனால், இன்று, கோவில் முழுவதையும் சுத்தம் செய்யும், ஆழ்வார் திருமஞ்சனம் நடக்க உள்ளது. இன்று காலை, 6:00 மணி முதல், 11:00 மணி வரை, ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. பின், நடை திறந்ததும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.