பழநி: பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் முக்கிய வழியான அடிவாரம் சரவணப்பொய்கை, முடிக்காணிக்கை நிலையம் அருகே ரோட்டில் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகள், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் தினமும் நெரிசலில் பக்தர்கள் சிக்கி தவிக்கின்றனர்.
பழநி ஞானதண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கானபக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் திருஆவினன்குடிகோயில் அருகேயுள்ள முடிக்காணிக்கை நிலையத்தில் மொட்டை எடுத்தபின் சரவணப்பொய்கையில் இலவசமாக குளிக்க குவிகின்றனர். இதனால் அப்பகுதியில் நடந்து செல்லமுடியாத அளவிற்கு ரோட்டின் நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள், இருசக்கர வாகனங்களை நிறுத்து கின்றனர். இதனால் போக்குவரத்துநெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமித்துள்ள வாகனங்கள், கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.