திருவாரூர்: சக்தி பீடங்களில் ஸ்ரீவித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சவுந்தர்ய, சவுபாக்கியம் அருளும் தேவிக்கு நவராத்திரி விழா நடைபெறுகிறது. துர்காபரமேஸ்வரியாய், ராஜலஷ்மியாய் மஞ்சுளவாணியாய் ஆதி அம்பிகை நவலோகமும் இயங்கும் அருள்மிகு மதுரபாஷினியை நவராத்திரி 9 நாட்கள் வந்து தரிசனம் செய்து சகல சவுந்தரிய சவுபாக்கியம் பெற்று பிறவியின் பெரும் பயனை பெறலாம். 10.10.2016 திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு அம்பாளுக்கு மகாஅபிஷேகம், அதைத்தொடர்ந்து வித்தியா <உபதேசம் நடைபெறுகிறது. படிப்பவர்கள், கலைகள் கற்பவர்கள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள் அம்பாளை அர்ச்சனை செய்து சகல நலம் பெறலாம். 11.10.2016 செவ்வாய்க்கிழமை தசவித்தியா மஞ்சுளவாணி பாத தரிசனம் காலை 9.30 மணிக்கு நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்:
2.10.2016 (ஞாயிறு) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம் 3.10.2016 (திங்கள்) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம் 4.10.2016 (செவ்வாய்) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம் 5.10.2016 (புதன்) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம் 6.10.2016 (வியாழன்) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம் 7.10.2016 (வெள்ளி) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம் 8.10.2016 (சனி) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம் 9.10.2016 (ஞாயிறு) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம் 10.10.2016 (திங்கள்) காலை: 10.00 மணிக்கு அம்பாளுக்கு மகா அபிஷேகம் மாலை: 6.30 மணிக்கு கிராம மக்கள் சீர் வைத்தல் 11.10.2016 (செவ்வாய்) காலை: 8.30 மணிக்கு அம்பாளுக்கு மகா அபிஷேகம் தசவித்தியா பாத தரிசனம் அதைத் தொடர்ந்து வித்தியா உபதேசம் குழந்தைகளுக்கு நடைபெறுகிறது.