பெண்ணாடம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை மூலவர், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில், முன் மண்டப வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு கொடிமரம் அருகே உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. வெள்ளிக் கவசத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார்.
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
கிள்ளை: பெரிய காரைமேடு சிவன்கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அதனையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.