பதிவு செய்த நாள்
29
செப்
2016
11:09
சாயல்குடி: நவராத்திரியை முன்னிட்டு சாயல்குடியில் கொலு பொம்மைகள் விற்பனை களைகட்டியுள்ளது. நவராத்திரியை முன்னிட்டு சாயல்குடி பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள மண்பாண்டக்கடைகளில் சீசன் வியாபாரமாக கலை நுணுக்கத்துடன் கூடியசுவாமி சிலைகள் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது.இந்தாண்டு புதுவரவாக அன்னபூரணி, சிவபெருமானுக்கு பிச்சையிடும் காட்சி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், பள்ளி கொண்ட பெருமாள், அண்ணாமலையார், கால பைரவர், பஞ்சமுக ஆஞ்சநேயர், தவழும் கண்ணன், அழகர் ஆற்றில் இறங்குவது, ராகவேந்திரர் உள்ளிட்ட சுவாமி சிலைகள், பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பூஜை அறையில் கொலு வைப்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் கொலு பொம்மைகள் விற்பனை களைகட்டி வருகிறது. மண்பாண்ட வியாபாரி எஸ்.மாரிமுத்து கூறுகையில், “மானாமதுரை கூட்டுறவு சங்கத்திலிருந்து கொலு பொம்மைகள் கொள்முதல் செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம். சுற்றுசூழலுக்கு கேடுவிளைவிக்காத களிமண்ணால் பொம்மைகள் செய்யப்பட்டுள்ளது. தரத்திற்கு ஏற்க 100 முதல் 700 ரூபாய் வரையிலும் விலை நிர்ணயம் செய்துள்ளோம். இவற்றை சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்,”என்றார்.