திருவண்ணாமலையில் புரட்டாசி சனி இரவு ஒரு மணிக்கு நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2016 10:09
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சனியை யொட்டி இரவு ஒரு மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு நள்ளிரவு ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கபட்டு, அதிகாலை 5:30 மணிக்கு காலசாந்தி பூஜை, மதியம் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜை, இரவு 8:00 மணிக்கு சாயரட்சை நடக்கிறது. இதை முன்னிட்டு கருடசேவையும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள், ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டிலிருந்து இன்று மாலை 6:00 மணி முதல் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.