கொலு பொம்மைகள் வைக்க உகந்த நேரம்: ராஜா சாஸ்திரி தகவல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2016 11:09
புதுச்சேரி: நவராத்திரி விழா நாளை (அக்.1ம் தேதி) ஆரம்பிக்கிறது. கொலு பொம்மைகள் எடுத்து வைக்க இன்று வெள்ளிக்கிழமை உகந்த நாள் என ராஜா சாஸ்திரிகள் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நவராத்திரி பூஜை கொலுவிற்கு கலச ஸ்தாபனம் செய்ய, பொம்மைகள் அடுக்க அமாவாசை தினமான இன்று (30ம் தேதி) வெள்ளிக்கிழமை உகந்த தினமாகும். காலை 9 மணி முதல் 10.30 மணி வரை புதன் சந்திர ஹோரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் குரு ஹோரையில் அல்லது இரவு 8 மணி முதல் 10 மணிக்குள் சுக்ர, புதன் ஹோரையில் மிக சிறந்த நேரமாகும். தொடர்ந்து நாளை சனிக்கிழமை அக்.1 முதல் நவராத்திரி பூஜைகளை தொடங்கலாம். மேலும் விபரங்களுக்கு 98423 29770, 98423 27791 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.