புதுச்சேரி: புரட்டாசி மாதம் மூன்றாம்சனிக்கிழமையை முன்னிட்டு, பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், தலை வாழை இலை போட்டு, லட்டு பிரசாதத்துடன்2 ஆயிரம் பேருக்குநாளை( அக்.1 தேதி) அன்னதானம் வழங்கப்படுகிறது. புதுச்சேரி – திண்டிவனம் மெயின் ரோடு பஞ்சவடீயில்,36 அடி உயர, ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையான நாளை (அக்.1ம் தேதி) பகல் 11.30 மணி முதல் 2.00 மணி வரை,2 ஆயிரம் பேருக்கு தலை வாழை இலை போட்டு, லட்டு பிரசாதத்துடன் உணவு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சாரிட்டபிள் டிரஸ்ட்செய்து வருகிறது.