பதிவு செய்த நாள்
30
செப்
2016
11:09
ஆர்.எஸ்.மங்கலம், : செங்குடி துாய மிக்கேல் அதிதுாதர் ஆலயத்தில் நடந்த தேர்பவனி விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி துாய மிக்கேல் அதிதுாதர் ஆலய விழா கடந்த செப்., 20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆராதனைகள் நடந்தது. பாதிரியார் சாமுஇதயன் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவனி நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மிக்கேல் அதிதுாதர், தேவமாதா, இயேசுநாதர், அருளானந்தர் ஆகியோர் வீதி உலா வந்து இறைமக்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் செங்குடி பாதிரியார்சாமுஇதயன், கிராம தலைவர் அருள்சூசை, செயலாளர் எல்.ஆரோக்கியசாமி, பொருளாளர் மிக்கேல்ராஜ், யூனியன் தலைவர் வ.து.ந.ஆனந்த், செங்குடி சேவியர், வெட்டுக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, சனவேலி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாபுசெல்வராஜ், அளவிடங்கான் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆரோக்கியசாமி, முன்னாள் ராணுவ வீரர் சேவியர்ராஜ், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆரோக்கியமோரீஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் செங்கோல், விஜயராணி சரவணன், புலி வீரதேவன் கோட்டை பாரதி தொடக்கப்பள்ளி ஆசிரியர் தனபாலன், புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருணாகரன், ஆனந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேவியர்ராஜ், தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆரோக்கிய சகாயதாஸ், ஜே.ஜே.கேபிள் உரிமையாளர் ஜான், அபர்ணா ஸ்டோர் உரிமையாளர் அரசு, ஜோதி ஆசிரியை, அன்னை ஆட்டோஸ் பேர்ஸ் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.