இளையான்குடி,: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நாளை (அக்1)ல் மாலை 4:30மணிக்கு விசேஷ பூஜையுடன் நவராத்திரி விழா துவங்குகிறது. தினமும் மாலை 4:30 மணிக்கு கும்பம் வைத்து அம்மனுக்கு சந்தன அலங்காரம் செய்து பூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக அக்.7 பகல் 3:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது. அக்10ல் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மாலை 4:30மணிக்கு அம்மனுக்கு வெள்ளி அங்கி சாத்தி சந்தன அலங்காரம் செய்து விசேஷ பூஜையும், அக்11ல் மாலை 4:30மணிக்கு விஜயதசமியை முன்னிட்டு அம்மனுக்கு வெள்ளி அங்கி சாத்தி விசேஷ பூஜைகளும் நடக்கிறது.