திருப்பதி பிரம்மோற்சவம்: வீணை ஏந்திய சரஸ்வதி கோலத்தில் சுவாமி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2016 02:10
திருப்பதி: திருமலையில் புரட்டாசி, நவராத்திரி பிரம்மோற்சவம் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒன்பது நாட்களுக்கு நடக்கும் இந்த விழாவில் மூன்றாம் நாளான இன்று(அக்.5) மலையப்பசுவாமி வீணை ஏந்திய சரஸ்வதி கோலத்தில் ஊஞ்சலில் எழுந்தளுளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவில் சுவாமி உலாவரும் மாடவீதிகளில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநில பெண்கள் தங்களது பராம்பரிய நடனத்தை ஆடியதுடன் அவ்வப்போது தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள விசிலடித்துக்கொண்டனர். மகராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து கண்டா என்ற வாத்தியக்கருவியை கொண்டுவந்து வாசித்தனர். மகராஷ்ட்ரா மாநில பெண்கள் உயரமான ட்ரம்ஸ்களை வாசித்து பக்தர்களை உற்சாகப்படுத்தினர்.