ஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி சனி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2016 12:10
வாடிப்பட்டி, வாடிப்பட்டி பொன் பெருமாள் மலை மேல் ஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி 4வது சனி வாரத்தை முன்னிட்டு அக்.,8ல் சிறப்பு அபிஷேக ஆராதனை மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.அன்று காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.மலை அடி வாரத்தில் ஸ்ரீநினுவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இப்பெருமாளையும் சனிக்கிழமை தரிசிப்பது சிறப்பு வாய்ந்தது. இந்த கோயில் விபரம் தினமலர் ஆன்மிக மலரில் செப்.24ல் வெளிவந்ததில் இருந்து பக்தர்கள் சனிக்கிழமைகளில் அதிகம் வருகின்றனர், என சுவாமி நியமானந்தர் கூறினார்.