பதிவு செய்த நாள்
07
அக்
2016
10:10
ரோதஸ்: பீஹாரில், ஆண்டுதோறும் நடக்கும் பேய் விரட்டும் திருவிழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. இதில், பேய் பிடித்ததாகக் கருதப்படும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 30 ஆண்டுகளாக..: பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசு உள்ளது. இங்குள்ள ரோதஸ் மாவட்டம், ஷாகாபாத்தில், ஆண்டுதோறும், பேய் விரட்டும் திருவிழா, ஒரு வாரம் நடக்கும். தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் திருவிழாவின் இந்த ஆண்டு நிகழ்ச்சி, நேற்று கோலாகலமாக துவங்கியது. இதில், பேய் பிடித்ததாகக் கூறப்படும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நம்பிக்கை: ஒருவரின் உடலுக்குள் புகுந்த எந்தப் பேயாக இருந்தாலும், இங்கே வந்ததும் வெளியேறி விடும் என்கிறார், நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர். இந்த ஊரில் உள்ள, ஒரு சுவற்றை நோக்கி வேண்டினால், பிரார்த்தனைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.