பதிவு செய்த நாள்
07
அக்
2016
11:10
திருவண்ணாமலை: செய்யாறில், நாகதேவதை சிலை மீது, நாகப்பாம்பு படம் எடுத்து ஆடியதால், பக்தர்கள் பரவசமடைந்து, கற்பூரம் காட்டி வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவத்திபுரத்தில், வேதபுரீஸ்வரர் கோவில் அருகே காங்கியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில், நாகதேவதை பீடம் உள்ளது. இங்குள்ள அம்மனை கர்ப்பிணிகள் வழிபட்டால், அவர்களுக்கு சுகப்பிரசவம் நடக்கும் என்பது ஐதீகம். கோவிலுக்கு, தினமும் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் வந்து வழிபட்டு செல்வர். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு கோவிலுக்கு வந்த பக்தர்கள், நாகதேவதை பீடத்தை வழிபட சென்றனர். அப்போது அங்கு வந்த, ஏழடி நீளமுள்ள நாகபாம்பு, நாகதேவதை சிலை மீது ஏறி படம் எடுத்து ஆடியது. இந்த தகவல் பரவியதும், கோவிலில் ஏராளமானோர் குவிந்தனர். மக்கள் அதிகளவு வந்தபோதும், அந்த பாம்பு சிலை மீதே படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்தது. பக்தர்கள் கற்பூரம் காட்டி வழிபட்டனர். பின், அங்குள்ள துளசி செடிகளை சுற்றி சுற்றி வந்து, இரவு, 7:00 மணி வரை பாம்பு அங்கேயே இருந்தது. பின்னர், அங்கிருந்து சென்று அருகில் இருந்த புற்றுக்குள் புகுந்து கொண்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.