மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) ஆபரண சேர்க்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2016 09:10
மதிநுட்பத்தால் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே!
மாதம் முழுவதும் சனி,ராகு நற்பலனை வாரி வழங்குவர். நவ. 4ல் புதன் சாதகமான இடத்திற்கு வருகிறார். இதனால் பின்தங்கிய பொருளாதாரம் சீர்படும். ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். தடைகள் படிப்படியாக விலகி செயலில் வெற்றி உண்டாகும். சமூகத்தில் மரியாதை சிறப்படையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். வீட்டுக்கு தேவையான வசதி அனைத்தும் கிடைக்கும். அக்.18க்கு பிறகு கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். நவ.3க்கு பிறகு புதிய முயற்சி வெற்றி பெறும். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். அக்.21,22ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். அக்.17,18, நவ.13,14ல் உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். அக்.27,28,29ல் உறவினர்கள் வகையில் வீண் பகை வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் மனைவி வகையில் ஏற்பட்ட பிரச்னை அக்.25க்கு பிறகு மறையும். அதன் பிறகு குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை உருவாகும். சூரியனால் அக்.25க்கு பிறகு உஷ்ண சம்பந்தமான பிரச்னை உருவாகலாம். வயிறு தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. நவ.9,10ல் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். முயற்சியில் இருந்த தடை அனைத்தும் மறையும். இதனால் லாபம் படிப்படியாக அதிகரிக்கும். ஆனால் இந்த மாதம் போட்டியாளர்களால் அவ்வப்போது பிரச்னை வரலாம். வெளியூர் பயணம் ஏற்படலாம். செவ்வாயால் ஏற்பட்ட வீண் அலைச்சல் அக்.25க்கு பிறகு மறையும். நவ.1,2,3ல் எதிர்பாராத வகையில் பணம் வரும்.
பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கைகள் நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல. வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். நவ.3க்கு பிறகு பதவி உயர்வு பெற வாய்ப்புண்டு. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். நவ.11,12 சிறப்பான நாட்களாக அமையும்.
கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் நவ.8க்கு பிறகு மறையும். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். புகழ் பாராட்டுக்கு எந்த பங்கமும் உண்டாகாது.
அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். அக்.30,31ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் பொது அறிவில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் மத்தியில் நன்மதிப்பு பெறுவர். புதனால் நவ.3க்கு பிறகு சிறப்பான பலன் உண்டாகும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர்.
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பயறு வகைகளில் அமோகமான மகசூல் கிடைக்கும். கால்நடை வகையில் லாபம் ஓரளவே இருக்கும். வழக்கு விவகாரத்தில் திருப்திகரமான முடிவு கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.
பெண்களின் வாழ்வில் குதுõகலம் ஏற்படும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். அக். 25,26 ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். நவ. 4,5 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். அக்கம் பக்கத்தினர் வகையில் இருந்த தொல்லை அக்.25க்கு பிறகு மறையும். நவ.3க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு அக். 17,18,21,22,25,26, நவ. 1,2,3,4, 5,11,12,13,14 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான மகரம் ராசியில் சந்திரன் நவ.6,7,8ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: கருப்பு, நீலம்
பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. சுவாதியன்று நரசிம்மரை வலம் வந்து வணங்குங்கள். தினமும் காலையில் சூரியதரிசனம் செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »