பதிவு செய்த நாள்
13
அக்
2016
10:10
திருப்பதி: திருமலையில், பிரம்மோற்சவத்திற்காக, ரத்து செய்யபட்ட தரிசனங்கள், மீண்டும் துவங்கின. திருமலையில், பத்து நாட்களாக, ஆண்டு பிரம்மோற்சவ விழா நடந்தது. இதற்காக, தேவஸ்தானம், அக்., 2 முதல், 11 வரை, திருமலையில், தினமும் நடக்கும் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி., தரிசனம், கை குழந்தையுடன் வரும் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் தரிசனம் உள்ளிட்ட, பல தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன. பிரம்மோற்சவம் முடிந்துள்ளதால், நேற்று முதல், மீண்டும், அனைத்து தரிசனங்களும் தொடங்கின.